நிகழ்வு-செய்தி

11 வது பாதுகாப்பு சேவை விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடர் வெற்றிகரமாக நிறைவு

11 வது பாதுகாப்பு சேவை விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக நடத்திய படகுப்போட்டித்தொடர் (Rowing Championship) இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குறித்த போட்டித்தொடர் 2020 பிப்ரவரி 28 முதல் மார்ச் 02 வரை தியவண்ணா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) நடைபெற்றது.

02 Mar 2020

வடக்கு கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 281 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 2,) யாழ்ப்பாணம் நாகர்கோயில், கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது கடலில் மிதந்த சுமார் 281 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தது.

02 Mar 2020

சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடற்படை உதவியால் கைது

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை கடலுக்கு அனுப்பியுள்ளது. குறித்த நடவடிக்கைகாக ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சயுரல, ஒரு மாத காலம் கடலில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

02 Mar 2020

இரத்த தான வேலைத்திட்டமொன்றுக்காக கடற்படை பங்களிப்பு

மன்னார் மருத்துவமனையில் இடம்பெற்ற இரத்த தான வேலைத்திட்டமொன்றுக்காக 2020 மார்ச் 01 ஆம் திகதி இலங்கை கடற்படை சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக தனது பங்களிப்பை வழங்கியது.

02 Mar 2020

வெடிபொருட்களுடன் மூன்று நபர்கள் (03) கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து 2020 மார்ச் 01 ஆம் திகதி கின்னியா, குரையாடி பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களை கொண்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

02 Mar 2020

போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்ய கடற்படை உதவி

திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் 2020 மார்ச் 01 ஆம் திகதி கடற்படை மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

02 Mar 2020

கேரள கஞ்சா வைத்திருந்த இருவரை கைது செய்ய கடற்படை உதவி

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து இன்று (2020 மார்ச் 02) கெபிதிகொல்லேவ பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

02 Mar 2020

வருடாந்த கச்சத்தீவு திருவிழாவுக்கு கடற்படை தயார்

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்கின்ற இந்திய-இலங்கை கடல் எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நடத்த கடற்படை தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

02 Mar 2020

நீல பசுமை திட்டத்தின் கீழ் தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட பல திட்டங்கள்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற நீல பசுமைத் திட்டத்தின் பல நிகழ்வுகள் 2020 பிப்ரவரி 29 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப்ப போலின் மேற்பார்வையில் தெற்கு மாகாணத்தில் செயல்படுத்தப்பட்டது.

02 Mar 2020

சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையால் கைது

2020 மார்ச் 01 ஆம் திகதி இரனைதீவு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் (02) கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

02 Mar 2020